×

நகை திருட்டு வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

நாமக்கல், டிச.28: நாமக்கல் மாவட்டம், மோகனூர் பிரம்மநாதன் நகரைச் சேர்ந்தவர் சரவணன்(42), வெற்றிலை வியாபாரி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, வியாபாரத்துக்கு சென்று விட்டார். அன்று இவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், வீட்டில் உள்ள பீரோவை உடைத்து, அதில் இருந்து, 8 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில், மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கோவை மாவட்டம், வீரநத்தத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (எ) திவான்(23) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, நாமக்கல் 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விஸ்வநாதன், குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணியனுக்கு, 3ஆண்டு சிறைத்தண்டனையும், ₹500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post நகை திருட்டு வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Saravanan ,Mohanur ,Brahmanathan ,Namakkal district ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...