- ஆங்கிலப் புத்தாண்டு
- திருவேகாடு தேவி
- கருமாரி அம்மன் கோயில்
- பூந்தமல்லி
- அருணாசலம்
- திருவேக்காடு தேவி கருமாரியம்மன் கோயில்
பூந்தமல்லி, டிச. 28: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் இணை ஆணையர் அருணாசலம் தலைமையில், ஆங்கில புத்தாண்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் அலுவலகத்தில், கோயில் இணை ஆணையர் அருணாசலம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர், வியாபாரிகள் சங்கத்தினர், மாநகர போக்குவரத்து கழகம், தீயணைப்புத்துறை, மின்வாரியம், தொலைபேசி துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப்புத்தாண்டு, ஆடி மாதம் உள்ளிட்ட விஷேச நாட்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனத்திற்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். அதேபோல, 2024 ஜனவரி 1ம்தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, டிசம்பர் 31 இரவு முதல் சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வருவார்கள். எனவே பக்தர்களின் வசதிக்காக, சுகாதாரமான குடிநீர், குப்பைகளை உடனடியாக அகற்றுதல், கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளித்தல், கழிப்பறை வசதி, தடையற்ற மின்வசதி, போலீஸ் பாதுகாப்பு, சென்னையின் பிற பகுதிகளிலிருந்து திருவேற்காடு வந்து செல்ல மாநகர பேருந்து வசதி, வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அனைத்து துறையினரின் உதவியுடன் செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக சிறப்பு வரிசை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கோயில் நிர்வாகம், காவல்துறை சார்பில் சிசிடிவி கேமரா மூலம் கூட்டத்தினரை கண்காணித்து கட்டுப்படுத்தவும், எந்தவித அசம்பாவிதம் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் என்.கே.மூர்த்தி, அறங்காவலர்கள் சந்திரசேகர செட்டி, கோவிந்தசாமி, வளர்மதி, சாந்தகுமார், கோவில் முன்னாள் அறங்காவலர் லயன் ரமேஷ், வியாபாரிகள் சங்க தலைவர் அருணகிரி, நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சேகர், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஆபிரகாம், விஜய கிருஷ்ணராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி, நகர் மன்ற உறுப்பினர் குருநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.