×

குழந்தையுடன் தாய் மாயம்

சாத்தூர், டிச.28: குழந்தையுடன் மாயமான தாயை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தூர் அருகே மேட்டமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(25). இவரது மனைவி செல்வமாரி(22), மகன் காளீஸ்வரன்(2). நேற்று முன்தினம் மாலை மகன் காளீஸ்வரனுக்கு காய்ச்சல் இருப்பதால் சாத்தூரில் மருத்துவ மனையில் ஊசி போட்டுவிட்டு வருவதாக செல்வமாரி சென்றார். ஆனால் இருவரும் வீடு திரும்பவில்லை. சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் கருப்பசாமி கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருகே ஆவடையாபுரத்தை சேர்ந்தவர் ஜெனகை மாரியம்மாள்(62). தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் வச்சக்காரப்பட்டி போலீசில் மகன் நாகராஜன் புகாரில் மூதாட்டியை தேடிவருகின்றனர்.

The post குழந்தையுடன் தாய் மாயம் appeared first on Dinakaran.

Tags : Mother Mayam ,Chatur ,Karuppasamy ,Mettamalai South Street ,Chatur.… ,Mayam ,Dinakaran ,
× RELATED சாத்தூர் படந்தால் சந்திப்பில்...