×

உயர்கோபுர மின்விளக்குகளை மாதந்தோறும் முறையாக பராமரிக்க கோரிக்கை

திருப்புத்தூர், டிச.28: திருப்புத்தூரில் உயர் கோபுர மின்விளக்கை மாதந்தோறும் முறையாக பராமரிக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் அண்ணா சிலை அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயர் கோபுர மின்விளக்குகள் கம்பம் வைக்கப்பட்டது. இந்த உயர் கோபுர மின்விளக்குகள் சரியாக எரியாததால் அப்பகுதியில் வெளிச்சமின்றி இருட்டாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த உயர் கோபுர மின் விளக்கை பேரூராட்சி பணியாளர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோபுரத்தில் விளக்குகளை தாங்கி நிற்கும் கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்தது. கீழ் பகுதியில் பணியை மேற்கொண்டிருந்த தொழிலாளர்கள் சிதறியடித்து ஓடினர். ஆனால் நெடுமரத்தை சேர்ந்த கஜேந்திரன் சிறுகாயத்துடன் உயிர் தப்பினார். இதுபோன்ற அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க உயர் கோபுர மின்விளக்குகளை மாதம் ஒருமுறையாவது சம்பந்தப்பட்ட நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உயர்கோபுர மின்விளக்குகளை மாதந்தோறும் முறையாக பராமரிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Dinakaran ,
× RELATED கஞ்சா கடத்திய வாலிபர் கைது