×

ஹஜ், உம்ரா பயணம் செல்வோர், வேலைக்கு செல்வோர் வசதிக்காக சென்னையிலிருந்து சவுதி அரேபியாவிற்கு நேரடி விமான சேவை தொடங்கியது

சென்னை: சென்னையில் இருந்து சவுதி அரேபியா ஜித்தா நகருக்கு செல்வதற்கு இதுவரை நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. இதனால் ஹஜ் பயணம் செல்வோர், உம்ரா பயணம் செல்வோர், சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு செல்வோர் பல இடங்களுக்கும் சென்று அங்கிருந்து தான் சவுதி அரேபியாவை அடைய முடியும். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் இந்திய பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோரிக்கையை ஏற்று, தற்போது சென்னையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு விமானம் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு சென்னையிலிருந்து முதல் விமான சேவை சவுதி அரேபியாவிற்கு இயக்கப்பட்டது. இந்த விமானத்தில் உம்ரா பயணம் செல்வோர், வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இவர்களை இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வரவேற்று விமானத்தில் அவர்களுடன் ஜித்தா நகருக்கு பயணம் மேற்கொண்டார்.

The post ஹஜ், உம்ரா பயணம் செல்வோர், வேலைக்கு செல்வோர் வசதிக்காக சென்னையிலிருந்து சவுதி அரேபியாவிற்கு நேரடி விமான சேவை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Saudi Arabia ,Hajj ,Umrah ,Jeddah, Saudi Arabia ,Dinakaran ,
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்