×

ஆன்லைன் டெலிவரி தொழிலாளர் நல வாரியம் அமைப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: தொழிலாளர் நலத் துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில், உணவு விநியோகம், மின்-வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மளிகை உள்ளிட்ட அனைத்து வகை வணிக பொருட்களின் விநியோகங்கள், இணைய செயலி வழியாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள் மற்றும் இதர சேவைகள் தற்போது இணையவழி கிக் (Gig) முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இணைய வழியே உணவு விநியோகம் உள்ளிட்ட சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நலவாரியம் அமைக்கப்படும் என கடந்த ஆக.15ம் தேதி சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியம் எனும் புதிய நல வாரியம் தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிசெய்யப்பட்டுள்ளது.

The post ஆன்லைன் டெலிவரி தொழிலாளர் நல வாரியம் அமைப்பு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Online Delivery Labor Welfare Board Organization ,Chennai ,Labor Welfare Department ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருநெல்வேலி, தென்காசியில் தொழிலாளர்...