- மேயர் ஆர். பிரியா
- வி. கே. நகர் மண்டல்
- சென்னை
- சாந்த்யோகி சமதி தெரு
- திரு.வி.கே.நகர் மண்டலம்
- பெருநகர சென்னைக் கழகம்
- தின மலர்
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட சந்தியோகி சமாதி தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தினை மேயர் ஆர்.பிரியா இன்று (27.12.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சமுதாயக் கூடத்தினைப் புதுப்பிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சந்திரயோகி சமாதி சாலையில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார்.
தொடர்ந்து, வார்டு-74க்குட்பட்ட மங்களபுரி, கிருஷ்ணதாஸ் சாலையில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடப் பணியினையும், நியூ வாழைமா நகர், 8ஆவது தெருவில் மேயரின் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.93 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் இறகுப்பந்து கூடத்தின் கட்டுமானப் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறித்த காலத்திற்குள் தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், சாஸ்திரி நகரில் கனமழையின் காரணமாக சேதமடைந்த சாலையினை சீரமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். வார்டு-71க்குட்பட்ட ஜமாலியா பகுதியில் அமைக்கப்பட உள்ள கால்பந்து மைதானத்திற்கான இடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் ஏ.எஸ்.முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆர்.பிரியா ஆய்வு appeared first on Dinakaran.