×

காஞ்சிபுரத்தில் ரவுடி பிரபா கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரவுடி பிரபா கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். ரவுடிகள் தாக்கியதில் இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் நேற்று ரவுடி ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பால பகுதியில் கொலையாளிகள் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் கொலையாளிகளை கைது செய்ய முயன்றபோது, அவர்கள் போலீசாரை அருவாளால் தாக்கியதால் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ரகு மற்றும் ஆசான் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறப்புக் காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் ஆகிய இருவரையும் ரவுடிகள் அரிவாளால் தாக்கியுள்ளனர்.

The post காஞ்சிபுரத்தில் ரவுடி பிரபா கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Rawudi Praba ,Kancheepuram ,Kanjipura ,
× RELATED உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய...