×

முசிறி அருகே தொட்டியம் மதுரை காளியம்மனுக்கு 31 பவுனில் மாங்கல்யம்

 

தொட்டியம், டிச.27: முசிறி அருகே தொட்டியம் மதுரை காளியம்மனுக்கு 31 பவுனில் மாங்கல்யம் செய்து பரிகார பூஜை செய்து அம்மனுக்கு சாற்றப்பட்டது. திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் மதுரை காளியம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கத்தினால் ஆன தாலி மாங்கல்யம் ஆகியவற்றை கடந்த சில வாரங்களுக்கு முன், கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர் அவரது மனைவி நித்யாவுடன் சேர்ந்து பட்டப்பகலில் திருடி சென்றார்.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை அவரது மனைவியுடன் கைது செய்து சுவாமியின் தாலியை, தங்க கட்டியாக மீட்டனர். இதையடுத்து தொட்டியம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பலர் தங்கள் சார்பில் மதுரை காளியம்மனுக்கு புதிதாக தங்கத்தினால் ஆன மாங்கல்யம் 31 பவுன் மதிப்பில் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று கோயில் வளாகத்தில் சிறப்பு பரிகார யாக பூஜை நடத்தப்பட்டு, முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் மதுரை காளியம்மனுக்கு புதிய மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், இன்ஸ்பெக்டர் முத்தையன், அறங்காவலர் குழு தலைவர் விஜய்ஆனந்த், பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு, செயல் அலுவலர் பிரகந்தநாயகி, கோவில் ஆய்வாளர் ஆனந்த், 18 பட்டியை சேர்ந்த முக்கியஸ்தர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post முசிறி அருகே தொட்டியம் மதுரை காளியம்மனுக்கு 31 பவுனில் மாங்கல்யம் appeared first on Dinakaran.

Tags : Mangalyam ,Tankiyam ,Madurai Kaliyamman ,Musiri ,Thaniyam ,
× RELATED பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ்...