×

அடகு வைத்த பொருட்கள் வங்கிக்கு தெரியாமல் விற்பனை: புதுக்கோட்டையில் பெண் உள்பட 3 பேர் கைது

 

புதுக்கோட்டை,டிச.27: புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியில் உணவு பொருட்களை டன் கணக்கில் சேமித்து வைக்கும் குடோனை திருச்சி புதூரை சேர்ந்த சேர்ந்த பழனிச்சாமி மகன் ராம்குமார் (58) என்பவர் வாடகைக்கு நடத்தி வருகிறார். இந்த குடோனில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளான் புல்லான்விடுதியை சேர்ந்த சுரேஷ் (44) அவருடைய மனைவி சுப்புலட்சுமி (40), இருவரும் ராம்குமாரின் குடோனில் டன் கணக்கில் மிளகாய், புளி, சோம்பு, கடுகு , கொல்லு உள்ளிட்ட பொருட்களை டன் கணக்கில் சேமித்து வைத்துள்ளனர்.

இந்த பொருட்களை வைத்து சுரேஷ் அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் புதுக்கோட்டை அம்பாள்புரம் ஐஓபி வங்கி, மாங்காடு ஐஓபி வங்கி என இரண்டு கிளைகளிலும் கடந்த 2018ம் ஆண்டு மே மாத்ததில் ரூ. 98 லட்சத்து 8 ஆயிரம் கடன் வாங்கி உள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு வரை வட்டியுடன் ரூ.ஒரு கோடியே 65 லட்சம் திருப்பி செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் இவர்கள் கடனை திருப்பி செலுத்தாமலும் அடகுவைத்த பொருட்களை வங்கிக்கு தெரிவிக்காமல் குடோன் உரிமையாளர் ராம்குமாருடன் இணைந்து விற்பனை செய்து விட்டனர்.

இதன் பிறகு சுரேஷ் அவருடைய மனைவி ஆகிய இருவரும் கேராளா சென்று கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். இதுகுறித்து மாங்காடு, அம்பாள்புரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்கள் அளித்த புதுக்கோட்டை மாவட்டம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பாரி மன்னன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து சுரேஷ், ராம்குமார், சுப்புலட்சுமி ஆகிய மூவரையும் கைது செய்து போலீசார் விசாரணை செய்து
வருகின்றனர்.

The post அடகு வைத்த பொருட்கள் வங்கிக்கு தெரியாமல் விற்பனை: புதுக்கோட்டையில் பெண் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Trichy Puthurai ,Mathur ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...