×

தேனீக்கள் கொட்டி தொழிலாளி பலி

ஒட்டன்சத்திரம், டிச. 27: கள்ளிமந்தையம் அருகே உள்ள தும்மிச்சிபாளையத்தை சேர்ந்தவர் ராசு (55), கூலித்தொழிலாளி. இவர், வீட்டின் அருகே, மரக்கிளையில் கட்டியிருந்த தேனி கூட்டிலிருந்து தேனை எடுக்க முயன்றார். அப்போது கூட்டில் இருந்த தேனீக்கள் பறந்து வந்து ராசுவை வளைத்து, வளைத்து கொட்டியது. இதில், படுகாயம் அடைந்த அவர், மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு வந்த கள்ளிமந்தையம் போலீசார், அவரை உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post தேனீக்கள் கொட்டி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Othanchatram ,Rasu ,Tummichipalayam ,Kallimanthayam ,
× RELATED 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!: கமுதி,...