×

ஆட்சி அமைத்து 25 நாளாகியும் அமைச்சர்களை நியமிக்காதது ஏன்? ராஜஸ்தான் காங். கேள்வி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த நவம்பர் 25ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வராக பஜன் லால் சர்மா கடந்த 15ம் தேதி பதவியேற்று கொண்டார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங், “ஆட்சி அமைத்து 25 நாட்களான பிறகும் பாஜ அரசு இன்னும் அமைச்சர்களை நியமிக்காதது ஏன்? முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூட இன்னமும் நியமிக்கப்படவில்லை.

இதனால் ராஜஸ்தான் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 2 தலித்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் யாரென்று தெரிந்தும் கைது செய்யப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜ தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது,” என்று கேள்வி எழுப்பினார்.

The post ஆட்சி அமைத்து 25 நாளாகியும் அமைச்சர்களை நியமிக்காதது ஏன்? ராஜஸ்தான் காங். கேள்வி appeared first on Dinakaran.

Tags : Rajasthan Cong ,Jaipur ,BJP ,Legislative Assembly elections ,Rajasthan ,Dinakaran ,
× RELATED மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக...