உசிலம்பட்டி, டிச. 27: ஆண்டிபட்டி வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட வைகை தண்ணீரானது 58ம் கால்வாய் வழியாக உசிலம்பட்டி பகுதிக்கு வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் விரைவாக செல்வதற்காக கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தனது சொந்த செலவில் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளார். இந்நிலையில் மாதரை கண்மாயில் இருந்து நல்லுத்தேவன்பட்டி கண்மாய் வரையிலும், உ.புதுக்கோட்டை கண்மாய் வரையிலும், இடையபட்டியிலிருந்து கீரிபட்டி கண்மாய் வரையிலும், திம்மநத்தம் கண்மாய் செல்லும் கால்வாய்களையும் ஓபிஎஸ் அணி எம்எல்ஏ அய்யப்பன் ஆலோசனையின் படி ஆதரவாளர்கள் மற்றும் அக்கட்சியின் மாவட்ட ஓட்டுநர் அணி செயலாளர் பிரபு, நகர செயலாளர் சசி, ஒன்றிய செயலாளர்கள் ஜான்சன், கோஸ்மின், ஜெயக்குமார் மற்றும் அழகுமாரி உள்ளிட்டோர் முன்னிலையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
The post உசிலம்பட்டி பகுதியில் வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.