×

வத்தலக்குண்டுவில் மாவட்ட எஸ்பி ஆய்வு

வத்தலக்குண்டு, டிச. 27: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் மாவட்ட எஸ்பி பிரதீப் ஆய்வு மேற்கொண்டார். நகரின் முக்கிய பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன் பின்னர் நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன், வத்தலக்குண்டு காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் உதவி ஆய்வாளர்களோடு ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தவிர, மற்றவர்கள் பிரஸ் என்று வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்றும், போலீஸ்காரராக இருந்தாலும் சொந்த வாகனங்களில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டகூடாது என்றும், மீறி ஒட்டியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

The post வத்தலக்குண்டுவில் மாவட்ட எஸ்பி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : District SP ,Wattalakundu ,Vatthalakundu ,Pradeep ,Wattalakundu, Dindigul district ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலி