×

கருங்குழி ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் மார்கழி மாத பவுர்ணமி விழா: சித்தரிடம் பக்தர்கள் ஆசி பெற்றனர்

மதுராந்தகம்: கருங்குழி ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் நடந்த மார்கழி மாத பவுர்ணமி விழாவில் சித்தரிடம் பக்தர்கள் ஆசி பெற்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் நேற்று மார்கழி மாத பவுர்ணமி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன சித்தர் யோகி ரகோத்தமா சுவாமிகள் பக்தர்களை சந்திக்கும் 116வது பவுர்ணமி தரிசனம் நடைபெற்றது. 12 மணிக்கு சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனைவுடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசி பெற்றனர்.

அதனை தொடர்ந்து மக்கள் நலமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து, சத்தியநாரயண பூஜையும் செய்து மகாதீப ஆராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்தார். இவ்விழாவில் கருங்குழி மட்டுமின்றி செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி, பெங்களூர், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சித்தரிடம் அருளாசி பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை யோகி ரகோத்தமா சுவாமிகள் அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில் செய்திருந்தனர்.

The post கருங்குழி ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் மார்கழி மாத பவுர்ணமி விழா: சித்தரிடம் பக்தர்கள் ஆசி பெற்றனர் appeared first on Dinakaran.

Tags : Margazhi Month Full Moon Festival ,Karunkuzhi Raghavendra ,Swami Brindavan ,Siddha ,Madhurantagam ,Margazhi month ,Karunkuzhi ,Raghavendra ,Swami ,Brindavan ,
× RELATED கருங்குழி ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள்...