×

கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலைய திறப்பு விழா அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

சென்னை: சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடுப் பணிகள் குறித்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறையுடன் இணைந்து நேற்றுஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சமயமூர்த்தி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தாம்பரம் காவல் ஆணையர், கூடுதல் தலைமை இயக்குநர் அமல்ராஜ், காவல் இணை ஆணையர் (போக்குவரத்து) மூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர் அனாமிகா, துணை ஆணையர் (போக்குவரத்து) குமார், போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர்கள், சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலைய திறப்பு விழா அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekhar Babu ,Klambach ,CHENNAI ,Chennai Metropolitan Development Group ,PK Shekharbabu ,Artist ,Centenary Bus ,Klambakan ,Shekharbabu ,Dinakaran ,
× RELATED பௌர்ணமியை முன்னிட்டு நாளை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்