சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவிடம் உள்ளது. அண்டை மாநில காங்கிரஸ் கட்சியினர் வந்தால், அங்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். கேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரன் மகளும், மாநில காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளருமான பத்மஜா வேணுகோபால் நேற்று ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடத்திற்கு வந்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, அவரை ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் முன்னாள் வட்டார தலைவர் புண்ணியநாதன், எஸ்.,ஏஸ்.டி., துறை நகர தலைவர் அம்மன் குமார், மகளிர் அணி செயலாளர் கண்மணி ஜீவரத்தினம், நகர துணை தலைவர் ஜீவா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post ராஜிவ்காந்தி நினைவிடத்தில் கேரள மாநில பொதுச்செயலாளர் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.