தர்மபுரி, டிச. 27: தர்மபுரி மாவட்ட, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வி.ஜெட்டி அள்ளி, மாந்தோப்பு, பிடமனேரி பெருமாள் கோயில் அருகே ஆகிய மூன்று இடங்களில், தலா ₹11 லட்சம் மதிப்பில், புதிய ரேஷன் கடைகள் திறப்பு விழா நேற்று நடந்தது.
ரேஷன் கடைகளை, இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரமேஷ் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் துணைத்தலைவர் வித்யா வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் சரவணன், வார்டு உறுப்பினர்கள் வெண்மதி தமிழ், அசோக்குமார், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post 3 புதிய ரேஷன் கடைகள் திறப்பு appeared first on Dinakaran.