×

சென்னை- இலங்கை விமானம் திடீர் ரத்து

சென்னை: சென்னையில் இருந்து நேற்று காலை 9.40 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், 186 பயணிகள் காத்திருந்தனர். இந்த விமானம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது. இதில் இலங்கை வழியாக சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா செல்லும் 40 பயணிகளை மட்டும் ஏர் இந்தியா உள்ளிட்ட வேறு விமானங்களில் அனுப்பினர். மற்ற 140 பயணிகளும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்களை சூழ்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர். அதற்கு அவர்கள், நாங்கள் இப்போது இலங்கை சொல்ல வேண்டும், இதற்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டனர். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், உங்கள் டிக்கெட்களை வேறு விமானத்திற்கு மாற்றி இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று அமைதிப்படுத்தினர். தொடர்ந்து இலங்கை செல்ல வேண்டிய பெண்கள், குழந்தைகள் உட்பட 140 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தவித்தபடி உள்ளனர்.

The post சென்னை- இலங்கை விமானம் திடீர் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sri Lanka ,SriLankan Airlines ,Colombo ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...