×

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பெண் பலி

தாம்பரம்: புதுபெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெனி (எ) மேரி (45). இவர் நேற்று முன்தினம் இரவு தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் தண்டவாளத்தை கடந்தபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தார்.

தகவலறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Jeni (A) Mary ,Puduperungalathur ,Perungalathur ,
× RELATED நண்பர்களுடன் மது விருந்து 2வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி