×

அண்ணாநகர் டவர் பூங்காவில் காதல் ஜோடிகளை குறிவைத்து பணம் பறித்த திருநங்கை கைது

அண்ணாநகர்: அண்ணாநகர் டவர் பூங்காவில், காதல் ஜோடிகளிடம் பணம் பறித்த திருநங்கை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் நேற்று முன்தினம் காதல் ஜோடிகளை மட்டும் நோட்ட ஒரு திருநங்கை, அவர்களை மிரட்டி பணம் பறிப்பதாக அண்ணாநகர் போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் அண்ணாநகர் தலைமை காவலர் சந்திரகலா (43) சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.  அப்போது, அங்கு ஒரு திருநங்கை, காதல் ஜோடியிடம் பணம் கேட்டு மிரட்டுவது தெரிந்தது. அவரை பிடித்த தலைமை காவலர், எதற்காக இங்கு வரும் காதல்ஜோடிகளிடம் பணம் கேட்டு மிரட்டுகிறாய், என்று கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கை திடீரென பெண் காவரை கையால் தாக்கி, அவரது செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்தார்.

உடனே, தலைமை காவலர் அண்ணாநகர் போலீசாருக்கு போன் செய்து வரவழைத்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், திருநங்கையை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த திருநங்கை விஷாலி (33) என்பதும், தினமும் அண்ணாநகர் டவர் பூங்காவில் காதல் ஜோடிகளை நோட்டமிட்டு அவர்களிடம் பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து திருநங்கை விஷாலி மீது வழக்கு பதிவு செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் தினமும் பல்லாயிரக்கணக்கோர் நடைபயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். குறிப்பாக காதல் ஜோடிகள் அண்ணாநகர் டவர் பார்க்கை பார்ப்பதற்கு வருவார்கள். இங்கு குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு அண்ணாநகர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டவர் பூங்காவில் வரும் காதல் ஜோடிகளை நோட்டமிட்டு திருநங்கைகள் பணம் பறித்து வரும் சம்பவம் அதிகரித்து வந்தது. இது தொடர்பாக, பொதுமக்களின் புகாரையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்ததால், இங்கு திருநங்கைகளின் அட்டகாசம் குறைந்துள்ளதுள்ளது,’’ என்றனர்.

The post அண்ணாநகர் டவர் பூங்காவில் காதல் ஜோடிகளை குறிவைத்து பணம் பறித்த திருநங்கை கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar Tower Park ,Annanagar ,Annanagar Tower Park, Chennai… ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் டிரைவர் கைது