×

திருப்பரங்குன்றம் அருகே கால்வாய் மதகில் உடைப்பு; குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி…!!

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே கால்வாய் மதகில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் அருகில் உள்ளது விளாச்சேரி கிராமம். இங்கு நிலையூர் – கம்பிக்குடி கால்வாய், பாசன கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு பொதுப்பணித்துறை சார்பாக நிலையூர் கண்மாய் மற்றும் அருகில் உள்ள கண்மாய்களுக்கு நீர் செல்கிறது.

நேற்று இரவு முதல் அதிகமான நீர் திறக்கப்பட்டதில் கால்வாய் மதகில் உடைப்பு ஏற்பட்டு வடிவேல் கரை என்ற கிராமத்தில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இது வெள்ளம் போன்று காட்சியளிப்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மேலும், பொதுப்பணித்துறை ஊழியர்கள் மதகு உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post திருப்பரங்குன்றம் அருகே கால்வாய் மதகில் உடைப்பு; குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி…!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tiruparangundaram ,Madurai District ,Thirupparangunram Uratchi Union ,
× RELATED நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர்