×

கூடுவாஞ்சேரியில் நாளை மாலை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நாளை (27.12.2023) பிற்பகல் 3 மணியளவில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் உள்ள என்பிஆர் திருமண மண்டபத்தில் மாவட்ட திமுக அவை தலைவர் த.துரைசாமி தலைமையிலும், மாவட்ட துணை செயலாளர்கள் இ.கருணாநிதி எம்எல்ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, து.மூர்த்தி மற்றும் மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற உள்ளது.

கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர – பகுதி – ஒன்றிய – நகர – பேரூர் திமுக செயலாளர்கள், திமுக அணிகளின் மாநில நிர்வாகிகள்- மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை இம்மாத இறுதிக்குள் திறந்து வைக்க வருகை தரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழியெங்கும் வரவேற்பு ஏற்பாடு செய்வது குறித்தும், திறப்பு விழாவில் திமுகவினர் ஆயிரக்கணக்கில் பங்கேற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. ஜனவரி மாதம் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக இளைஞரணியினர் பங்கேற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post கூடுவாஞ்சேரியில் நாளை மாலை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Northern ,District Dimuka Emergency Working Committee ,Matravancheri ,Minister Tha. Mo. Anbarasan ,Kanchipuram ,Minister ,Kanchipuram Northern District ,Anbarasan ,Kanchipuram Northern District Dimuka Emergency ,Kanchipuram Northern District Dimuka ,Emergency Working ,Committee ,Tha. Mo. Anbarasan ,Dinakaran ,
× RELATED கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்!