×

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துகிறேன்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.. தொண்டர்கள் ஆடி, பாடி உற்சாகம்..!!

சென்னை: பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் கூடியது. பொதுக்குழு மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும். கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி,

பாஜகவுடன் கூட்டணி இல்லை:

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை கடந்த செப்டம்பர் மாதமே தெளிவுபடுத்திவிட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என இபிஎஸ் கூறியதும் அரங்கில் இருந்த தொண்டர்கள் ஆடி, பாடி உற்சாகமடைந்தனர்.

தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை:

தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை; மக்கள் தான் எஜமானர்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்தபோது கூட்டணி தர்மத்துக்காக மக்கள் விரோத செயல்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது. மக்களுக்கு எதிரான திட்டங்களை கூட்டணி தர்மம் என தவிர்க்க வேண்டிய சூழல் இனி நமக்கு இல்லை. மக்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது பாஜக அரசு:

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு நடத்துவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். எந்த காலத்திலும் தமிழ்நாடு கோரும் நிதியை ஒன்றிய அரசு வழங்குவதில்லை. காங்கிரசாக இருந்தாலும் பா.ஜ.க.வாக இருந்தாலும் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றன என்றார்.

ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எடப்பாடி ஆவேசம்:

அதிமுக ஆட்சியில் வர்தா உள்ளிட்ட பல புயல்கள் வந்தபோதும் தமிழ்நாடு அரசு கோரிய நிதியை ஒன்றிய அரசு வழங்கியதில்லை என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.

மனிதாபிமானத்துடன் ஒன்றிய அரசு நடந்து கொள்ளவேண்டும்:

தமிழ்நாட்டுக்கு நிவாரணம் வழங்குவதில் ஒன்றிய அரசு மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். ஒன்றிய அரசு தனது கடமையை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.

The post பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துகிறேன்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.. தொண்டர்கள் ஆடி, பாடி உற்சாகம்..!! appeared first on Dinakaran.

Tags : Pa. J. K. ,Eadapadi Palanisami ,Sikvatam ,Audi ,Chennai ,Pa. ,J. K. ,Vaanakarathil Adimuka ,Eadapadi Palanisami Sikvatam ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!