×

விருதுநகர் மாவட்டம் முழுவதும் விடியவிடிய களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

*தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

*இனிப்பு வழங்கி உற்சாகம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. விருதுநகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டடது. நள்ளிரவு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைகள் சிறப்பு திருப்பலி, மறையுரை, ஜெபவழிபாடுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விருதுநகர் புனித இன்னாசியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா விருதுநகர் மறைவட்ட அதிபரும் பங்குத்தந்தையுமான அருள்ராயன் அடிகளார், உதவி பங்குத்தந்தை கரோலின் சிபு அடிகளார், ஜேம்ஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

நிறைவாழ்வு நகர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணிசாமி அடிகளார் தலைமையிலும் பாண்டியன்நகரில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை லாரன்ஸ் அடிகளார், எஸ்.எப்.எஸ். பள்ளி முதல்வர் ஆரோக்கியம் அடிகளார், உதவி பங்குத்தந்தை இம்மானுவேல் சதீஷ் அடிகளார் ஆகியோர் தலைமையிலும் கிறிஸ்துமஸ் திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது.

விருதுநகர் அருகில் உள்ள ஆர்.ஆர் நகர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில், பங்குத்தந்தை பீட்டர்ராய் அடிகளார், உதவி பங்குத்தந்தை அருள்தாஸ் அடிகளார் தலைமையிலும், சாத்தூர் புனித இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் பங்குத்தந்தை காந்தி அடிகளார் தலைமையிலும், சாத்தூர் அருகில் உள்ள ஒத்தையால் குழந்தை இயேசு ஆலயத்தில் பங்குத்தந்தை ஜான் மில்டன் அடிகளார் தலைமையிலும் கிறிஸ்துமஸ் திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை தாமஸ் எடிசன் அடிகளார் தலைமையிலும் காரியாபட்டி தூய அமல அன்னை ஆலயத்தில் ஜோசப் அமலன் அடிகளார் தலைமையிலும், சிவகாசி புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜான்மார்ட்டின் அடிகளார் தலைமையிலும், திருத்தங்கல் புனித அந்தோனியார் ஆலயத்தில் பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ் அடிகளார் தலைமையிலும், மீனம்பட்டி புனித அன்னை தெரசா ஆலயத்தில் பங்குத்தந்தை பால்ராஜ் அடிகளார் தலைமையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது.

காலை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியும் மாலையில் நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது. திருப்பலியின் முடிவில் குழந்தை ஏசுவை முத்தமிட்டு அருளாசி பெற்றுச் சென்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளை ஆடிப்பாடி மகிழ்வித்து பரிசு பொருட்கள் வழங்கினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். ஒருவருக்கொருவர், இனிப்பு, புத்தாடை, அன்பை பறிமாறிக் கொண்டனர்.

சிவகாசி: சிவகாசி ரிசர்வ்லையன் மரியானூஸ்நகரில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் அருட்பணி அற்புதசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் திருப்பலியும், மறையுரையும் நடந்தது.
நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதே போன்று சிவகாசியில் பல்வேறு கிருஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

காரியாபட்டி: காரியாபட்டியில் அமைந்துள்ள அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. பங்கு தந்தை ஜோசப் அமலன் ஆசியுரை வழங்கினார். அமலா பள்ளி அருட்சகோதரிகள் மற்றும் ஆசிரியர்கள் கிறிஸ்துமஸ் ஆராதனை பாடல்கள் பாடினர். தமிழ்நாடு லுத்திரன் திருச்சபையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை சபை குரு விஜயன் பெரியநாயகம் தலைமையில் நடைபெற்றது. காரியாபட்டி ஏ.ஜி. திருச்சபையில் பாஸ்டர் ஞான பிரகாசம் தலைமையில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது. காரியாபட்டி சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அமல அன்னை ஆலய பங்கு தந்தை ஜோசப் அமலன் கேக் வெட்டி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடினார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சுரபி நிறுவனர் விக்டர் நன்றி கூறினார்.

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே உள்ள மாலையாபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. பங்குத் தந்தை சாமுவேல் அடிகளார், அருட்பணி அமல ஞான பிரபு பிரான்ஸ் இணைந்து ஆடம்பர கூட்டு பிரார்த்தனை நிறைவேற்றினர். கிறிஸ்துமஸ் தாத்தா நடனத்துடன் பங்கு மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள் செய்திருந்தனர். 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருவில்லிபுத்தூர்:திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ. பரிசுத்த பவுல் தேவாலயத்தில் பாடகர் குழு சார்பில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி சபை குரு அருள்தனராஜ் தலைமையில் நடைபெற்றது. பாடகர் குழுவின் தலைவர் ஜெபஞானரூபி தலைமையில் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினர்.

உதவி குருக்கள் ஜெபராஜ்எபிநேசர் வேத பாடங்கள் வாசித்தார். மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு இறையியல் மற்றும் இசை கல்லூரி பேராசிரியை ஷீலா டைட்டஸ் சிறப்பு தேவசெய்தியளித்தார். ஆராதனையில் ஏராளமான சபை மக்கள் கலந்து கொண்டனர்.

The post விருதுநகர் மாவட்டம் முழுவதும் விடியவிடிய களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Christmas ,Virudhunagar district ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...