×

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு நாள் சென்னையில் டிச.28-ல் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி: ப.சிதம்பரம்

சென்னை: வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு நாள் சென்னையில் டிச.28-ல் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பெரியார் தலைமையேற்ற புரட்சியின் ஆண்டு 1924 என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். போராட்டத்தின் வெற்றிக்கு பிறகே 1936-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ‘ ஆலயப் பிரவேசப் பிரகடனம்’ அறிவிக்கப்பட்டது. பெரியாரின் புரட்சி சிந்தனைகள், மன உறுதி, தொலைநோக்கு ஆகியவற்றை இளைஞர்கள் நினைத்து பார்க்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

The post வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு நாள் சென்னையில் டிச.28-ல் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : Vaikam ,Chennai ,P Chidambaram ,Periyar ,P. Chidambaram ,
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...