×

நெருங்கும் நடாளுமன்றத் தேர்தல்; சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

பாஜக உடனான கூட்டணி முறிந்த பின்னர் தற்போது முதல் பொதுக்குழு கூட்டம் கூடியுள்ளது. நடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடியது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பொதுக்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க 2320 பொதுக்குழு உறுப்பினர்கள், 235 செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை நீக்கியது தொடர்பாக ஒப்புதல் பெறும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 38 தீர்மானங்கள்:

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

The post நெருங்கும் நடாளுமன்றத் தேர்தல்; சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Executive Committee ,Committee ,Chennai Vanakaram ,Srivaru Hall ,Adimuka Awaithalaithala ,Tamil ,Son Hussain ,
× RELATED கராத்தே அசோசியேசின் செயற்குழு கூட்டம்