×

துணை ஜனாதிபதி தன்கர் குழந்தையை போல் அழுகிறார் சிறையில் அடைத்தாலும் மிமிக்ரி செய்வேன்: திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: மிமிக்ரி என் அடிப்படை உரிமை, என்னை சிறையில் அடைத்தாலும் தொடர்ந்து மிமிக்ரி செய்து கொண்டே இருப்பேன் என திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது கடந்த 13ம் தேதி மக்களவையில் கலர் புகை குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து முதலில் 141 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற நுழைவாயில் படிக்கட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைதலைவருமான ஜகதீப் தன்கரை போல் வளைந்து, நௌிந்து நடித்து காட்டி மிமிக்ரி செய்தார். இந்த விவகாரம் புயலை கிளப்பி உள்ளது. இது வெட்கக்கேடான, கேலிக்குரிய, ஏற்று கொள்ள முடியாத செயல் என ஜகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று தனது சொராம்பூர் தொகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கல்யாண் பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “ஒன்றியத்தில் ஆளும் அரசை மகிழ்விக்க எதிர்க்கட்சிகளுக்கு ஜகதீப் தன்கர் நெருக்கடி தருகிறார். இன்னும் எவ்வளவு வளைந்து கொடுப்பீர்கள்? நரேந்திர மோடியையும், அமித் ஷாவையும் எவ்வளவு மகிழ்விக்க விரும்புகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியதுடன், மீண்டும் ஜகதீப் தன்கரை போல் கை, கால்களை அசைத்து காட்டி, பாஜ அரசுக்கு வளைந்து கொடுப்பதற்கு பதிலாக நாட்டை காப்பாற்ற வேண்டும் என கூறினார்.

கல்யாண் பானர்ஜியின் இந்த செயலுக்கு பாஜவினர் மீண்டும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கல்யாண் பானர்ஜி கூறியதாவது, “மிமிக்ரி என்பது ஒரு கலை, அது உணர்வின் வௌிப்பாடு. அதை யாராலும் அழிக்க முடியாது. இதற்கு ஏன் ஜகதீப் தன்கர் குழந்தையை போல் அழுகிறார். என் கருத்தை, எதிர்ப்பை எனக்கு தெரிந்த வழியில் சொல்ல எனக்கு அடிப்படை உரிமை உள்ளது. நீங்கள் என்னை சிறையில் அடைத்தாலும் நான் மிமிக்ரி செய்து கொண்டே இருப்பேன்” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

The post துணை ஜனாதிபதி தன்கர் குழந்தையை போல் அழுகிறார் சிறையில் அடைத்தாலும் மிமிக்ரி செய்வேன்: திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Vice President ,Thankar ,Trinamool ,Kalyan Banerjee ,Kolkata ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!