×

மோடியை பற்றி அவதூறு: மாஜி காங்.எம்பி மீது வழக்கு பதிவு

அம்ரேலி: பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பேசிய முன்னாள் காங்கிரஸ் எம்பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம்,அம்ரேலியில், கடந்த 22ம் தேதி நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்பி விர்ஜி தும்மர், மோடியை தரகர் என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. மோடியை பற்றி ஆட்சேபகரமான கருத்து தெரிவித்ததாக கூறி தும்மருக்கு எதிராக மாவட்ட பாஜ நிர்வாகி மெஹூல் தோராஜியா நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, தும்மருக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் 499,500 மற்றும் 504 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விர்ஜி கூறுகையில்,‘‘ எனது நோக்கம் யாரையும் இழிவுபடுத்துவது அல்ல, ஆனால் ஆளுங்கட்சிக்கு எதிராக பொதுமக்கள் தங்கள் கோபத்தைக் காட்டுவதால் ஆத்திரமடைந்த பாஜவினர், எனது உருவ பொம்மையை எரிக்கின்றனர். நான் தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடட்டும்,” என்றார்.

The post மோடியை பற்றி அவதூறு: மாஜி காங்.எம்பி மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : MODI ,MAJI KANG ,Amreli ,Congress ,Amreli, Gujarat ,MB ,Dinakaran ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...