×

முன்னாள் ஒடிசா மாநில ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை

சென்னை: மறைந்த எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்ற எம்.எம்.ராஜேந்திரன் மறைவு பேரிழப்பாகும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக மறைந்த எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்மாலை வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், பெருந்தலைவர் காமராஜர், தமிழினத் தலைவர் கலைஞர் உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றியவரும், தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.எம்.ராஜேந்திரன் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். 1957ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் தனது பணியைத் தொடங்கி, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் ஆட்சித் தலைவராகவும், ஒன்றிய அரசின் செயலாளராகவும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றி இந்திய ஆட்சிப் பணியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து. ஓய்வுக்குப் பிறகும் ஒடிசா மாநில ஆளுநராக செவ்வனே மக்கள் பணியாற்றியவர் எம்.எம். ராஜேந்திரன்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அண்ணாரின் மறைவு ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர். உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.எம். ராஜேந்திரன் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது சேவைகளைப் போற்றும் வகையில், காவல்துறை மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும்என்றும் தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

The post முன்னாள் ஒடிசா மாநில ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை appeared first on Dinakaran.

Tags : Former ,Odisha ,governor ,M. ,M. Police ,Rajendran ,Tamil Nadu ,Chief MLA K. Stalin ,Chennai ,M. M. Chief Minister ,Stalin ,Odessa ,State Governor ,M. M. Police ,MLA K. Stalin ,
× RELATED சொல்லிட்டாங்க…