×

தத்துவம் தந்த உத்தமர் பிறந்தநாள் வாழ்த்திக்கொள்ள மட்டுமல்ல வாழ்வதற்கும்: கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் தின வாழ்த்து

சென்னை: “தத்துவம் தந்த உத்தமர் பிறந்தநாள் வாழ்த்திக்கொள்ள மட்டுமல்ல வாழ்வதற்கும்” என கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் தின தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “சகிப்புத்தன்மை சகமனிதனை மதித்தல் தன்னுயிர் போலவே மண்ணுயிர் பேணுதல் என்பனவெல்லாம் நீதி மொழிகள் அல்ல; ஏசு பெருமான் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் நெறிகள்

இந்த நெறிகளை மதம் சார்ந்தும் வாழலாம்; மதம் கடந்து மனம் சார்ந்தும் வாழலாம். தத்துவம் தந்த உத்தமர் பிறந்தநாள் வாழ்த்திக்கொள்ள மட்டுமல்ல வாழ்வதற்கும்” என தெரிவித்துள்ளார்.

The post தத்துவம் தந்த உத்தமர் பிறந்தநாள் வாழ்த்திக்கொள்ள மட்டுமல்ல வாழ்வதற்கும்: கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் தின வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Utthamar ,Poet Vairamuthu ,Christmas ,CHENNAI ,Christmas Day ,
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...