×

கோயிலுக்கு செல்லும் சாலையில் இருபக்கமும் முள்செடிகள் அகற்றம்

திருவாடானை,டிச.25: திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் வாகனங்கள் மூலம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகின்றனர். மேலும் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருவெற்றியூர்-திருவாடானை சாலையில் கோயில் இருக்கும் இடத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறமும் முள் செடிகள் படர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்த செய்தி தினகரனில் கடந்த 12ம் தேதி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சீமை கருவேல முள் செடிகள் என்ற தலைப்பில் செய்தி வெளியானது.இந்த செய்தியை தொடர்ந்து சாலையின் இருபுறமும் இருந்த முள் செடிகள் ஜேசிபி வாகன மூலம் அகற்றப்பட்டது.

The post கோயிலுக்கு செல்லும் சாலையில் இருபக்கமும் முள்செடிகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Bagampriyal Amman ,Thiruvettiyur ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்