வலங்கைமான், டிச. 25: வலங்கைமான் ஒன்றியத்தில் 10 கிராம ஊராட்சிகளில் ரூ.2.5 கோடியில் துணை சுகாதார நிலையம் தலா ரூ.25 லட்சத்தி்ல் செவிலியர் தங்கும் விடுதி வசதியுடன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.பொதுமருத்துவமனை நகர்புறங்களுக்கு எவ்வளவு சிறப்பானதாக கருதப்படுகிறதோ அதே போல கிராமப்புறங்களில் உள்ள துணை சுகாதார நிலையமும் ஆகும். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஆலங்குடி, இனாம் கிளியூர், ஹரிதுவாரமங்கலம் மற்றும் ஆவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் கீழ் பொதுப்பணித்துறையின் மூலம் புறநோயாளி பிரிவு மற்றும் செவிலியர் தங்கும் விடுதியுடன் துணை சுகாதார நிலையம் ரூ.25 லட்சத்தில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.
The post வலங்கைமான் ஒன்றியத்தில் 10 கிராம ஊராட்சிகளில் appeared first on Dinakaran.