×

அரியலூர் மாவட்டத்தில்பெரியார் நினைவு தினம் அனுசரிப்புசிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு

அரியலூர்,டிச.25: அரியலூர் மாவட்டத்திலுள்ள பெரியார் நினைவுத் தினத்தையொட்டி அவரது சிலைகளுக்கு திமுக, தி.க, மதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து நேற்று அஞ்சலி செலுத்தினர்.
அரியலூர் ரெட்டி ஏரிக்கரையிலுள்ள பெரியார் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா தலைமையில் மதிமுக மாவட்ட செயலர் ராமாதன், ஒன்றிய செயலர் சங்கர், ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அரியலூர் திமுக நகர செயலர் முருகேசன் தலைமையிலான கட்சி நிர்வாகிகளும், நகராட்சி துணை தலைவர் கலியமூர்த்தி, திமுக நகர துணை செயலாளர் விஜி, கவுன்சிலர்கள் அன்பு ராஜேஷ், புகழேந்தி, கண்ணன், திமுக மாவட்ட பிரதிநிதி ராமு, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் குணா, திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அருண் ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் அடுத்துள்ள வாரணாசி சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு திருமானூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் தமிழரசி சுந்தர் தலைமையில் சமத்துவபுரத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் சுகாதார தொழிலாளர் சங்க மாநில செயலர் தண்டபாணி தலைமையிலான ஏஐடியுசி நிர்வாகிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர் அங்கனூர் சிவா தலைமையிலான நிர்வாகிகளும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

The post அரியலூர் மாவட்டத்தில்பெரியார் நினைவு தினம் அனுசரிப்புசிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Periyar ,day ,Ariyalur district ,Ariyalur ,DMK ,DK ,MDMK ,
× RELATED உடையார்பாளையம் அருகே பழமையான பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு