×

தூத்துக்குடியில் மேலும் ஒரு ‘வார் ரூம்’ திறப்பு

தூத்துக்குடி, டிச.25: கடந்த 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தூத்துக்குடியில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வெள்ள நிவாரண பணிகளை கண்காணிக்கவும், நிவாரண பணிகளுக்கு உதவியாகவும் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பியது.
இதையடுத்து வெள்ளத்தடுப்பு மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும், கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகள் சென்றடையவும் வசதியாக இருக்கும் விதத்தில் கலெக்டர் அலுவலகத்தில் புதிய வார் ரூம் துவக்கப்பட்டு, இயங்கி வருகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்ட டிஐஜி துரை தலைமையில் டிஆர்ஓ அஜய் சரவணன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி பிரபா உள்ளிட்டோர் கண்காணிப்பில் இந்த அறை இயங்கி வருகிறது. இங்கு அனைத்துத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.

The post தூத்துக்குடியில் மேலும் ஒரு ‘வார் ரூம்’ திறப்பு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...