×

திருப்பராய்த்துறையில்மக்கள் நல பாதுகாப்பு மைய ஆலோசனை கூட்டம்

ஜீயபுரம், டிச.25: மக்கள் நல பாதுகாப்பு அறக்கட்டளை மையத்தின் ஆலோசனை கூட்டம் திருப்பராய்த்துறையில் நடந்தது.அறக்கட்டளை நிறுவனரும், மாநில தலைவருமான வெங்கடாச்சலம் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட தலைவர் செல்வராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலாராணி, கார்த்திகேயன், பாஸ்கர், கரும்பாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டு உடமைகள், வீடுகளை இழந்து தவிக்கும் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுப்பது. வைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த பயணிகள் குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டி உணவளித்த மேலூர் புதுக்குடி கிராம மக்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிப்பது. வரும் ஜனவரி மாதத்தில் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் ராமநாதன் வரவேற்றார்.
கடல்கமல் நன்றி கூறினார்.

The post திருப்பராய்த்துறையில்மக்கள் நல பாதுகாப்பு மைய ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : People's Welfare Protection Center ,Tiruparai ,Jiyapuram ,People's Welfare Trust Center ,Thiruparaithurai ,Venkatachalam ,
× RELATED சிறுகமணி பேரூராட்சியில் ரூ.10 லட்சத்தில் புதிய பாலம்