மதுரை: தந்தை பெரியாரின் 50வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினர். பின்னர், வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தந்தை பெரியாரை இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.
சமீபகாலமாக பெரியார் சிலையை ஒரு கூட்டம் திட்டமிட்டு அவமதிப்பு செய்கிறது. அதற்கு நாங்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம். வெளிப்படையாக பெரியார் சிலையை அவமதிப்பு செய்வோம் என கூறிவிட்டு யாராவது ஒருவர் அவமதித்தால், அவர்கள் கை இருக்காது. ஒன்றிய அமைச்சர்கள் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டினார். இதனால் தான் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய வருகிறார்’’ என்றார்.
The post தென்மாவட்ட வெள்ள பாதிப்பு ஆய்வு: உதயநிதியின் குற்றச்சாட்டால் நிர்மலா சீதாராமன் வருகிறார்: வைகோ appeared first on Dinakaran.