×

50வது நினைவு தினம் பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை

சென்னை: பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் 50வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள அவரது சிலைக்கு நேற்று காலை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் திமுக பொது செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பிக்கள் ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், மயிலை த.வேலு, தாயகம் கவி, இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர் மதன் மோகன், வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெரியார் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம். “கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம். வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post 50வது நினைவு தினம் பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Periyar ,Chennai ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...