சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் நேற்று கூறியிருப்பதாவது: அழுத்தப்பட்ட-உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு சுயமரியாதை, இனமான உணர்வூட்டி, தலைநிமிர்ந்து நிற்க வைத்த தந்தை பெரியாரின் 50வது நினைவு நாளான இன்று், முதல்வர் மு.க.ஸ்டாலின், சக அமைச்சர்கள்- திமுக நிர்வாகிகளோடு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தோம்.
உருவத்தால் மறைந்தாலும் உணர்வால் தமிழ்நாட்டை இயக்கிக் கொண்டிருக்கும் தந்தை பெரியாரின் நினைவினைப் போற்றுவோம். பகுத்தறிவையும் மானுடப்பற்றையும் முதன்மையாகக் கொண்டு தொண்டாற்றிய தந்தை பெரியாரை நினைவுகூர்ந்து அவர் விட்டுச் சென்றுள்ள பணிகளை செய்து முடிக்க உறுதியேற்போம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post பெரியார் விட்டு சென்ற பணிகளை செய்து முடிக்க உறுதியேற்போம்: அமைச்சர் உதயநிதி டிவிட் appeared first on Dinakaran.