×

முப்பெரும் விழாவை முன்னிட்டு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவி: செங்கை பத்மநாபன் வேண்டுகோள்

சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச் செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: டிசம்பர் 25ம் தேதி (இன்று) என்னுடைய பிறந்த நாள், நமதுரிமை காக்கும் கட்சியின் 3ம் ஆண்டு துவக்க நாள், மனித உரிமை காவலன் பத்திரிகையின் 13ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு முப்பெரும் விழாவாக தமிழகம் தழுவிய அளவில் விழா காணும் நமதுரிமை காக்கும் கட்சி நிர்வாகிகளே தற்போது பெரும்பாலான தமிழக மக்கள் இயற்கை சீற்றத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை மனதில் கொண்டு நீங்கள் அனைவரும் உங்களால் இயன்ற நல திட்ட உதவிகளை செய்ய வேண்டும். அனைத்து மத வழிபாட்டு இடங்களுக்கு சென்று இனம் மதம் மொழி சாதி கலாச்சார பிரிவினை மறந்து ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வழிபட்டு அனைத்து மக்களும் விரைவில் துயரத்தில் இருந்து மீள பிராத்திக்க வேண்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post முப்பெரும் விழாவை முன்னிட்டு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவி: செங்கை பத்மநாபன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tribhu Festival ,Senkai Padmanabhan ,CHENNAI ,General Secretary of the ,Party for the Protection of Our Rights ,Dr. ,Senkai Padmanaban ,Tri-Berhu Jubilee ,Sengai Padmanaban ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...