×

50வது நினைவு நாள்: பெரியார் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

சென்னை: பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பெரியாரின் 50வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மாநில தலைவர் கி.வீரமணி பெரியார் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அஞ்சலி செலுத்திய பிறகு, அங்கிருந்து அமைதி ஊர்வலமாக வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வந்து அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல், சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.விசிக சார்பில் துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., வன்னி அரசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாமக சார்பில் மாவட்ட செயலாளர் மயிலை சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் பெரியார் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பெரியார் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post 50வது நினைவு நாள்: பெரியார் சிலைக்கு தலைவர்கள் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Periyar ,Chennai ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...