×

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 30 முதல் மழை பெய்ய தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை: தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 30 முதல் மழை பெய்ய தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு காற்று வலுவாக இருப்பதால் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25, 26ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27.12.2023 மற்றும் 28.12.2023 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

29.12.2023 மற்றும் 30.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

The post தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 30 முதல் மழை பெய்ய தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Indian Meteorological Centre ,Chennai ,Indian Meteorological Survey ,IMC ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்