×

பெரம்பலூரில் தி.க. சார்பில் பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம்

பெரம்பலூர்,டிச.24: பெரம்பலூரில் தி.க. சார்பில் பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக தந்தை பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று (சனிக்கிழமை) மாலை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விசயேந்திரன் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் துரைசாமி, நகரத்தலைவர் ஆறுமுகம், பெரம்பலூர் ஒன்றிய தலைவர் பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன், நகர செயலாளர் ஆதிசிவம், பகுத்தறிவாளர் கழக செயலாளர் கந்தசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், தி.க தலைமை கழக பேச்சாளர் பூவை புலிகேசி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் வீர செங்கோலன், தமிழ் வழிக்கல்வி இயக்க செயலாளர் கவிஞர் தேனரசன், இந்திய தொழிலாளர் கட்சியின் தலைவர் ஈஸ்வரன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காமராசு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் குதரத்துல்லா, மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைவர் காவேரி நாடன், தி.க மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சுகுமாரன், அமைப்பாளர் குமரேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சின்னசாமி நன்றி தெரிவித்தார்.

The post பெரம்பலூரில் தி.க. சார்பில் பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : PERAMBALUR ,Periyar Memorial Day General Meeting ,PERAMBALUR K. ,Periyar ,Perambalur District Dravidar Corporation ,Berambalur ,Thi. K. ,Memorial Day ,General Meeting ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை