×

மண்டைக்காடு அருகே மது அருந்திய கொத்தனார் திடீர் சாவு

 

குளச்சல், டிச.24 : மண்டைக்காடு அருகே அழகன்பாறை காளிவிளையை சேர்ந்தவர் மரிய செபஸ்டியான். இவரது மகன் வினோ(44). கொத்தனார். வினோவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியமும் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த வினோ படுக்கையில் படுத்தார். ஆனால் பின்னர் அவரது உடலில் எந்த அசைவும் தெரியவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வினோவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து மரிய செபஸ்டியான் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மதுவில் விஷம் கலந்து வினோ குடித்தாரா அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மண்டைக்காடு அருகே மது அருந்திய கொத்தனார் திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Mandaikkadu ,Kulachal ,Maria Sebastian ,Alaghanpara ,Kalivilai ,Vino ,Mason ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது