×

தம்பதியை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் கைது

விருதுநகர், டிச. 24: விருதுநகர் மேற்கு பாண்டியன் காலனியை சேர்ந்த சக்திவேல்(29), நேற்று முன்தினம் வீட்டுவாசலில் நின்று கொண்டு பக்கத்து குடியிருப்பு வாசிகளை தரக்குறைவாக பேசி உள்ளார். இதை அப்பகுதியில் வசிக்கும் சாவித்திரி (36) என்பவர், எதற்கு திட்டுகிறீர்கள் என கேட்க, அவரை தரக்குறைவான வார்த்தைகளால் சக்திவேல் பேசி கல்லால் தாக்க முயன்றுள்ளார். இதை தொடர்ந்து சாவித்திரி கணவர் மாரிமுத்து, சக்திவேலிடம் பிரச்னை தொடர்பாக கேட்க அவரை கத்தியால் தாக்க முயன்றுள்ளார். ேமலும் குடும்பத்துடன் கொலை செய்து விடுவேன் என மிரட்டி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரில் மேற்கு போலீசார் சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தம்பதியை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Sakthivel ,West Pandyan Colony, Virudhunagar ,Dinakaran ,
× RELATED நிலக்கடலையில் வேர் அழுகல் நோய்...