×

ராஜபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்பி, எம்எல்ஏ துவக்கி வைத்தனர்

ராஜபாளையம், டிச. 24: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சி தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தென்காசி எம்பி தனுஷ்.எம் குமார், ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் முகாமை துவங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர். தொடர்ந்து ராஜபாளையம் நகர் தெற்கு வைத்தியநாதபுரம் சாலியர் மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமினை எம்பி, எம்எல்ஏ மற்றும் நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் துவங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டானர்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, நகராட்சி ஆணையர் .நாகராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், பேரூர் கழக செயலாளர் சிங்கம்புலி அண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post ராஜபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்பி, எம்எல்ஏ துவக்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : CM Project Camp ,MLA ,Rajapalayam ,Chetur ,Rajapalayam, Virudhunagar district ,Dinakaran ,
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்