×

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி

 

சுரண்டை,டிச.24: ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தென்மாவட்டங்களில் ெநல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட பகுதிகளில் கடந்த 17ம் தேதி பெய்த வரலாறு காணாத கனமழையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் தலைமையில் நான்கு மாவட்டங்களில் மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் இரண்டு நாட்களிலேயே தென்காசி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்தது.

இதையடுத்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மருத்துவ உதவி தேவைப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முகாம், ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி முகாம், பெரியநம்பி திருமண மண்டபம், ஆழ்வார்தோப்பு கிராமம் முகாம், சமுதாய நலக்கூடம் ஆகிய முகாமில் தங்கி இருந்த 3 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

The post ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Srivaikundam ,Surandai ,Tenkasi South District DMK ,Jayabalan ,Dinakaran ,
× RELATED சுரண்டையில் நள்ளிரவில் மர்மநபர் துணிகரம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி