புதுடெல்லி: சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் ரூ.62,476 கோடி வரி செலுத்தாமல் தப்பிக்க அந்த பணத்தை சீனாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து, சீன நாட்டவர்கள் உட்பட 4 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தது. இந்நிலையில், விவோ இந்தியா நிறுவனத்தை சேர்ந்த இடைக்கால சிஇஓ ஹாங்க் கியூகுவன், தலைமை நிதி அதிகாரி ஹரிந்தர் தஹியா மற்றும் ஆலோசகர் ஹேமந்த் முன்ஜால் ஆகிய 3 பேரை கைது செய்தது.
The post விவோ நிர்வாகிகள் 3 பேர் கைது appeared first on Dinakaran.