×

சேலம் ஜி.ஹெச்.சில் நோயாளி கழுத்தை அறுத்து தற்கொலை

சேலம்: சேலம் ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்தன் (48). சோபா செய்யும் தொழிலாளியான இவருக்கு ஆஷா என்ற மனைவியும் 13 வயதில் மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்தனும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஆனந்தனுக்கு கால் பாதத்தில் புண் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 6ம் தேதி அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் நோயின் தாக்கம் குறையவில்லை. மேலும், அடிக்கடி சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்ததால் மனம் உடைந்த அவர் நேற்று அதிகாலை பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், டாக்டர்கள் ஆனந்தனுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் ஜி.ஹெச்.சில் நோயாளி கழுத்தை அறுத்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Salem GH ,Salem ,Anandhan ,Johnsonpet, Salem ,Asha ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...