×

திண்டுக்கல்லில் பூசாரிகள் பேரவை கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல், டிச. 24: திண்டுக்கல்லில் பூசாரிகள் பேரவை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாநில இணை செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் குமார் வரவேற்றார். மாவட்ட தலைவர் சரவணகுமார், செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பூசாரிகள் ஓய்வூதியம், நல வாரிய சலுகைகள் விரைந்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற கோயிலில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ10,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

The post திண்டுக்கல்லில் பூசாரிகள் பேரவை கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Priests' Council ,Dindigul ,Dindigul Priests' Council ,State ,Udayakumar ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...